மஹிந்த உடைத்தால் பொண் குடம் மைதிரி,ரனில் உடைத்தால் மண் குடம் ; இபாஸ் நபுஹான்

NEWS


கிந்தோட்டை கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள் உடைப்பதை பாதுகாப்பு படைவீரர்களே முன்னின்றும் செய்ததார்கள் இனவாதிகள் செய்வதற்குஅனுமதியளித்தார்கள் என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டை அப்பகுதி வாழ் மக்கள்கூறியுள்ளனர்.இந்த விடயம் மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் மஹிந்தஆர்மியை அனுப்பி முஸ்லிம்களை தாக்கியதாக அஸாத் சாலி முஜிபுர் ரஹ்மான்போன்றவர்கள் கூறியிருப்பார்கள் என பானதுறை பிரதேச சபை முன்னாள்தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்

அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த அரசானது முஸ்லிம்களின் பூரண ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும்இதன்மூலம் இலங்கையில் நிலவும் கொடிய இனவாதத்தை ஒழித்து தாருங்கள் என்றகோரிக்கையையே பிரதானமாக முன் வைத்திருந்தனர்இப்படி முஸ்லிம்களின்பூரண ஆதரவுடன் அமைக்கப்பட்ட இவ்வரசின் காலப்பகுதியில் தான் முஸ்லிம்கள்மீது இனவாதம் தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றதுஇது முஸ்லிம்கள்பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ள கதை போன்று உள்ளது.

எமது குழு கிந்தோட்டை பகுதிக்கு நேரடி களவிஜயம் மேற்கொண்டது .பொலிஸ்அதிரடிப்படை முஸ்லிம்களின் வீடுகளை உடைத்ததாகவும் இனவாதிகள்தாக்குதல் மேற்கொண்ட போது அதனை அங்கிருந்த பாதுகாப்பு பிரிவுவேடிக்கைப்பார்த்ததாகவுன் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர் .

இது ஒரு பாரதூரமான விடயம்.நல்லாட்சி மீது முஸ்லிம்கள் நம்பிக்கைஇழந்துவிட்டனர்.இந்த விடயத்தை ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு தப்பிக்கமுடியாது.அங்குள்ள மக்கள் சொத்துக்கள் உடைமைகளைஇழந்துள்ளார்கள்.அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு அரசாங்கம்நின்றுவிடாமல் அவர்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையில் அரசுசெயற்படவேண்டும்.

முஸ்லிம்களே இந்த முருகல் முற்ற காரணம் என சிலர் கூறுகிறார்கள்.ஒரு சிலர்செய்த தவறுக்காக ஒரு ஊரை கொழுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது இதேமஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் கோத்தாவும் மஹிந்தவும் ஆர்மியை அனுப்பிமுஸ்லிம்களை தாக்கியதாக சிலர் வாய் கூசாமல் கூறியிருப்பார்கள் என அவர்குறிப்பிட்டுள்ளார்.
Tags
3/related/default