க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Image result for ol students

எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் இவ்வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால், 15ஆம் திகதிக்கு முன்னரே கிடைக்கும் வகையில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , குறித்த விண்ணப்பத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்