123 வாக்குகளால் இன்றும் தோல்வியடைந்த மகிந்த!

நாடாளுமன்றம் மீண்டும் இன்று காலை 10 மணி அளவில் கூடியது. இன்றைய அமர்வில் பிரதமர் அலுவலகத்தின் நிதி முடக்கம் தொடர்பான யோசனைக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 இதன் போது 123 வாக்குகளால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மேலும், இன்றைய அமர்வில் ஆளும்தரப்பிலிருந்து விஜேயதாச மாத்திரம் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.