மகிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனம்?

Ceylon Muslim
0 minute read
பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரங்களுக்காக குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொaள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வௌியிடப்பட்டுள்ளன. 

மேலும் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியே அந்த இரண்டு வாகனங்களையும் கொள்வனவு செய்ததாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவிவருகின்றது.

அவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதன் மூலம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்காக இதுவரை எந்த புது வாகனங்களும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
To Top