போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் வழங்கிய மாணவன் மீது தாக்குதல்!

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மாணவன் தாக்குதலுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன் மீது நேற்று (28) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.