Headlines
Loading...
மைதிரி,ரணில்,கோத்தா : தெரிவுக்குழு முன் வர வேண்டும்

மைதிரி,ரணில்,கோத்தா : தெரிவுக்குழு முன் வர வேண்டும்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாக வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவில்லை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்பு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments: