தெமட்டகொட பிரதேச வீடொன்றிலிருந்து, 30 மில்லியன் ரூபாய் மற்றும் 1,40,000 அமெரிக்க
டொலர்கள் பணம் பொலிஸாரால் கைற்றப்பட்டுள்ளது.
நேற்று (31) இரவு 9.10 மணியளவில் கொழும்பு வடக்கு பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பணம் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்த பணத்தொகை போதைப் பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
