இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் வாசு 19க்கு ஆதரவு

ADMIN
0 minute read
0

இரட்டைக்குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்காத வகையில் 19ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்தை 20லும் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் வாசுதேவ நானாயக்கார.

ஆளுங்கட்சிக்குள் 20ம் திருத்தச் சட்டத்தின் வரைபு தொடர்பில் கருத்து முரண்பாடு நிலவி வருகின்ற அதேவேளை பலரும் இதனை ஆதரித்துள்ளனர்.

எனினும், 20ம் திருத்தச் சட்டத்தை கொண்டு வருவது உறுதியென ஜி.எல். பீரிஸ் ஆணித்தரமாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

To Top