![ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim1k5Dz8wIPJrlGNIxVGJd9yZnUDUMph2tzQMT6uJjecy0T3wI3ogxutAaeZ9aDK4nTI-WEmRPss0GKWKL8pibKKbJMuekD57f6Ogp_Ebku2JYtxIy2ehNgHxrdQNY8LZGPzxYStqvwQ/w700/Capture+2020-09-03+19.23.38.jpg)
ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமானதென தெரிவித்து T56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து போலி சாட்சிகளை முன்வைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments: