வகுப்பில் மதுபானம் அருந்திய மூன்று பாடசாலை மாணவிகள் கைது


மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்று அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவிகள் எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மாணவிகள் மதவாச்சியில் உள்ள விகாரை ஒன்றில் நடத்தப்படும் தனியார் வகுப்பில் கலந்துக்கொள்ளவதற்காக வந்த போது, தண்ணீர் போத்தல்களில் பியர் மது பானத்தை எடுத்து வந்து அருந்திக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவிகள் நீண்ட காலமாக மதுபானத்திற்கு அடிமையாகி இருப்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்