மாகாணசபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டதன் பின்னரே, தேர்தலை நடத்துவதற்கான வழிமுறை குறித்து ஆராயப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் ஊடாகவே இதற்கான தீர்வை எட்ட முடியும் என, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவதாயின் சுமார் 4000 மில்லியன் ரூபாய் செலவாகுமென, ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.