இரத்தினபுரி- எஹலியகொடவில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
அங்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நீர்வியோக திட்டமொன்றை ஆரம்பித்து வைப்பதற்காக சென்றிருந்தார்.
எஹலியகொட தலப்பிட்டிய நகரத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரர் உள்ளிட்டோரை வைபவ இடத்துக்குச் செல்லவிடாது வழிமறித்தனர்.
இதனால் அங்கு பதற்றமான நிலைமை உருவானது. அந்த நிலைமை சுமார் ஒரு மணிநேரத்துக்கு நீடித்தது.
