அடக்கம் செய்வது தொடர்பில் வீதி போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கை விடுப்பது சரியானதல்ல - ஓமல்பே தேரர் எச்சரிக்கை.


கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் வீதி போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாக கோரிக்கை விடுப்பது சரியான விடயமல்ல என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.



இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவிற்கு மாத்திரமே, தீர்மானம் எடுக்கும் உரிமை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளை செய்கின்றமை குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமை எந்தவொரு மதத்திற்கும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்