தம்மிக்க பாணி அருந்தியவரையும் கொரோனா தொற்றியது



வரக்காபொல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களிடையே கேகாலை- தம்மிக்க பாணியை அருந்திய நபரொருவரும் அடங்குவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களது குடும்பத்தாரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்