குருநாகலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .

 தனிமைப்படுத்தப்பட்டுள்ள குருநாகல்- தித்தவெல்கால பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைக்கமைய,

அங்கு 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


குறித்த பிரதேசத்தில் 700 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 500 பேரின் அறிக்கைகள் கிடைத்துள்ளதென்றும் இதற்கமைய, 100 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதென்றும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, தித்தவெல்கால பிரதேசத்தில் 1,320 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்