20 கிலோ கேரள கஞ்சாவுடன் பெண் கைது



-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - பேசாலை, 8ஆம் வட்டார பகுதியில், நேற்று முன்தினம் (18) இரவு, சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேசாலை, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், மேலதிக விசாரணையின் பின்னர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்