வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்குமா? இல்லையா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதை தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முக்கியமான தருணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உரிய தீர்மானங்களை எடுக்கும் என்றும் அறிவித்தார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இவ்வாறு தெரிவித்துள்ளார். R
0 கருத்துகள்