சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்த அவர் நாளையதினமே நாடு திரும்ப இருந்தார்.
ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் நேற்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதனை அடுத்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்று (புதன்கிழமை) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமானார்
மறுபுறம் ஜனாதிபதியின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென ஆளுங்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படாவிடின் தமது அமைச்சுப் பொறுப்பை துறக்கப் போவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் கூறியிருப்பதாக தெரியவந்தது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி அவசரமாக நாடு திரும்பியுள்ளார் என்றும் இன்று முக்கிய பல சந்திப்புகளை நடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்