Headlines
Loading...
   மதுபான உற்பத்தி நிறுத்தப்படுமா?

மதுபான உற்பத்தி நிறுத்தப்படுமா?




மார்ச் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்துண்டிப்பு காரணமாக எத்தனோல் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மதுவரித் திணைக்களத்தின் உரிமம் பெற்ற 23 மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

மதுபான உற்பத்திக்கு தேவையான எத்தனோல் உள்ளிட்ட மூலப்பொருட்களை தற்போது உள்ளூர் சந்தையிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (R)

0 Comments: