Headlines
Loading...
  சாரதி அனுமதி பத்திரம் குறித்து வெளியான புதிய தகவல்’

சாரதி அனுமதி பத்திரம் குறித்து வெளியான புதிய தகவல்’






ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.




சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.




அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டிற்கே அனுப்பப்படும் என போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


0 Comments: