Headlines
Loading...
  ஜெய்லானி விவகாரம், அலி சப்ரியின் வீட்டில் பேச்சு - பாபர் மஸ்ஜித் விவ­கா­ரத்திற்கு சட்­டத்தை அணு­கிய போது முஸ்லிம் சமூ­கத்­துக்கு பாதிப்பு ஏற்­பட்­டது என்கிறார்

ஜெய்லானி விவகாரம், அலி சப்ரியின் வீட்டில் பேச்சு - பாபர் மஸ்ஜித் விவ­கா­ரத்திற்கு சட்­டத்தை அணு­கிய போது முஸ்லிம் சமூ­கத்­துக்கு பாதிப்பு ஏற்­பட்­டது என்கிறார்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)



‘கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் இருப்­புக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள சவால்­களை முஸ்லிம் சமூகம் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் சமா­தா­ன­மாக தீர்த்­துக்­கொள்ள வேண்டும். இரு தரப்பு பேச்­சு­வார்த்­தை­களே இன்­றைய சூழலில் நன்மை பயக்கும். இந்த நிலைப்­பாட்­டிலே நானும் இருக்­கிறேன்’ என நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

வியா­ழக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் அலி சப்ரி கொழும்பில் தனது இல்­லத்தில் தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகையில் இரு­த­ரப்பு சந்­திப்­பொன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். பள்­ளி­வா­ச­லுக்கு சவால் விட்­டுக்­கொண்­டி­ருக்கும் நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரரும் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். ஜெய்­லானி பள்­ளி­வாசல் தலைவர், நிர்­வா­கிகள், சூபி தரீக்கா உயர்­பீட உறுப்­பி­னர்கள், சட்­டத்­த­ர­ணிகள் என்போர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

நீதி­ய­மைச்சர் இச்­சந்­திப்பு தொடர்பில் தொடர்ந்தும் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், ‘பல தசாப்த கால­மாக இப்­பள்­ளி­வாசல் பிரச்­சினை தொடர்­கி­றது. இப்­பி­ரச்­சி­னைக்கு சுமுக தீர்வு காணும் நோக்­கு­டனே இச்­சந்­திப்­பினை ஏற்­பாடு செய்­தி­ருந்தேன். இப்­பி­ரச்­சி­னைக்கு சட்ட ரீதியில் தீர்வு காணு­வ­தென்றால் அதற்கு நீண்ட காலம் செல்லும். இந்­தி­யாவில் இது போன்ற பிரச்­சி­னையில் சட்­டத்தை அணு­கிய போது முஸ்லிம் சமூ­கத்­துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்­பட்­டது. இங்கு இந்­தியா பாபர் மஸ்ஜித் விவ­கா­ரத்தைக் குறிப்­பிட்டுக் கூறலாம். எனவே நாம் சுமு­க­மான பேச்­சு­வார்த்­தைகள் மூலம் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­வதே சிறந்­தது.

பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முதற்­கட்­ட­மாக நில அள­வை­யாளர் மற்றும் கட்­டடக் கலைஞர் அடங்­கிய குழு­வொன்று கூர­க­லக்கு விஜயம் செய்து பள்­ளி­வாசல் பற்றி ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றினைச் சமர்ப்­பிக்­கும்­படி கோரி­யி­ருக்­கிறேன்.

அதன்­பின்பு தொல்­பொருள் திணைக்­களம், புத்­த­சா­சன மற்றும் சமய கலா­சார அமைச்சு, வக்பு சபை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­ப­ன­வற்­றுடன் கலந்­து­ரை­யாடி பிரச்­சி­னை­களைத் தீர்த்­துக்­கொள்ள முடியும் என நினைக்­கிறேன் என்றார்.

இதே­வேளை நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தப்தர் ஜெய்­லா­னியின் ஸியாரம் மற்றும் கொடி கம்பம் தவிர ஏனைய தகர கட்­ட­மைப்பு உட்­பட அனைத்தும் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கூர­கல தப்தர் ஜெய்­லானி உட்­பட்ட பிர­தேசம் சிவ­னொ­ளி­பாத மலை போன்று அனைத்து இன மக்­களும் விஜயம் செய்து வணக்க வழி­பா­டு­களில் ஈடு­படும் கலா­சார பிர­தே­ச­மாக அமைய வேண்டும் எனக் கூறி­யுள்ளார்.

இதேவேளை நீதியமைச்சர் அலிசப்ரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கட்டட கலைஞர், நில அளவையாளர் அடங்கிய நால்வர் கொண்ட குழு நேற்று மாலை கூரகலக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு ஜெய்லானி பள்ளிவாசலை ஆய்வு செய்தது. அக்குழு நெல்லிகல தேரரை சந்திக்கவும் ஏற்பாடாகியிருந்தது.- Vidivelli

0 Comments: