Headlines
Loading...
  வாசு, கம்மன்பில, விமல் எடுத்த மற்றுமொரு அதிரடி முடிவு

வாசு, கம்மன்பில, விமல் எடுத்த மற்றுமொரு அதிரடி முடிவு


அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் 23ம் திகதி சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.


இந்த நிலையில், குறித்த மூன்று பேரும், தமது பரிந்துரைகளை, சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளின் ஊடாக முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments: