பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு


தேசிய ரீதியிலான பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே 23 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரையும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16 ஆம் திகதியும், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது.

Tags