காலி, அவள் மனம் தளரவில்லை பொருத்தமான அரச உத்தியோகத்தில் அமர வேண்டும் என்ற ஆவல் மேலோங்கி இருந்தது அவ்வாறான தருணத்தில் தான் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் பதவிக்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கை நடைபெறுவதாக அறியக் கிடைத்தது. ஜிப்ரியாவும் அதற்கான விண்ணப்பம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதற்கான பரீட்சையை திறம்பட செய்ததன் விளைவாக 2006 ஆம் ஆண்டிலே கோட் முதலியார் என்ற பதவியிலே அவர் அமர்த்தப்பட்டார். அவரின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை
இந்த பதவி கிடைத்து ஒரு சில காலங்களில் அவர்
யூனானி மருத்துவதுறைக்கு தெரிவு செய்யப்படுகிறார்.
ஆனால் தான் மேல்படிப்பை மேற்கொண்டால் தனது சகோதரிகளின் படிப்புக்கான செலவுகளை ஈடுசெய்வதற்கான வசதி தாய் தந்தையரிடம் போதாமை காரணமாக தான் வகித்து வந்த முதலியார் பதவியை கைவிடவில்லை. தொடந்து அந்த தொழிலில் ஈடுபட்டார்.
காலம் செல்ல செல்ல நீதி தேவதையின் நிழலில் நின்ற வண்ணம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரின் உள்ளத்தில் வலுவாக ஊன்றி நின்றது. மூத்தவளுக்கே ஏற்ற பொறுப்பும் தாய் தந்தையரின் அரவணைப்பில் கிடைத்த அன்பும் அவருக்கே உரித்தான ஆளுமையும் அவரின் எதிர்காலத்தின் அத்திவாரத்தை நிர்ணயித்தது.
கல்வி பயிலும் காலத்தில் பாடசாலையின் சிறந்ததோர் மாணவியாகத் திகழ்ந்த ஜிப்ரியா பல போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பாடசாலைக்காக பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்தவராவார். கவிதை எழுதுவதிலும் அவர் சிறந்து விளங்கினார்.
காலம் மெல்ல மெல்ல கடந்து சென்றது.
2008 ஆண்டிலே அவர் சட்டக்கல்லூரியின் திறந்த பரீட்ச்சைக்கு தோற்றி இலங்கை சட்டக் கல்லூரியின் மாணவியாக தெரிவு செய்யப்பட்டார்.
2012 ஆண்டில் ஒரு சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட இவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திலே பணியாற்றி வந்தார்.
இவரோடு சக முதலியாராக சேவை புரிந்த திஹாரியைச் சேர்ந்த தில்ஹாமை மணம் முடித்த இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் கணவரும் தற்போது ஒரு சட்டத்தரணியாக கடமையாற்றி வருகிறார்.
ஜிப்ரியா என்ற ஆளுமை மிக்க பெண் சட்டத்தரணி பல கோணங்களில் மிளிரத் தொடங்கினார். அவரின் பேச்சு வன்மை விவாதத் திறமை, மும்மொழிகளிலும் திறம்பட பேசக்கூடிய ஆற்றல் அவரின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாய் அமைந்தது.
கிட்டத்தட்ட பண்ணிரண்டு வருடங்கள் சட்டத்தரணியாக நின்று சாதித்த பெண் ஆளுமை அவரின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக உழைத்தார்.
சட்டத்துறையின் மேற்படிப்புக்காக நாவலை சட்டக்கல்லூரியில் இணைந்து ( LLM ) பட்டத்தை பெற்றதோடு
சட்டத்துறைக்கு மிகவும் அத்தியாவசியமான DIPLOMA IN FORENSIC MEDICINE எனும் வைத்தியத்துறை கற்கை நெறியை பேராதெனியாப் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
எப்படியாவது ஒரு நீதிபதியாக வரவேண்டுமென்ற கனவைச் சுமந்தவளாய் அதற்கான தருணம் வரும் வரை காத்திருந்தார்.
அதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியெய்திய அவர்
2025. 04. 01 ஆம் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ் அவரின் கனவு மட்டுமல்ல தாய் தந்தையரின் பிரார்த்தனையும் நிறைவேறிய சந்தோஷத்தில் அவர் அகமகிழ்ந்தார்.
நமது சமூகம் இதனைப் பாராட்ட வேண்டிய கட்டாய தேவையுள்ளது.
நாம் தேடிப்பார்த்த போது தென்மாகாணத்தில் இருந்து ஒரு பெண் கூட நீதிபதியாக வரவில்லை என்று அறியக் கிடைத்தது.
மாறாக ஒரு ஆண் நீதிபதியாக இருந்தார். என்பதை நாம் அறிகிறோம். அவர் பியதிகமையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அல்ஹாஜ் அப்துல் ஸலாம் அவர்கள். அவர் வேறு யாருமல்ல நாம் மேற்கூறிய ஜிப்ரியாவின் தந்தையான இர்ஷாத் அவர்களின் மிக நெருங்கிய உறவினர் ஆவார்.
எமது சமூகத்தின் பெருமையை நாடறியச் செய்த பாத்திமா ஜிப்ரியா அவர்களை வாழ்த்துவதோடு இந்த பதிவை அனைவருக்கும் பகிர்ந்து இவர் போன்ற இன்னும் பல ஆளுமையுள்ளவர்களை உருவாக்க துணை புரியுங்கள்.
நன்றி.
கலைமணாளன் ஹிஷாம் - காலி