யாழ்ப்பாணத்தில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட ச ண்டையில் ம னைவியின் த ங்கையின் மீ து க த்திக் கு த்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தென்மராட்சி – கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கணவன் – மனைவி இடையிலான வா க்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றுள்ளார். அதனை அடுத்து சகோதரியின் கணவன் தான் வைத்திருந்த கத்தியால் குறித்த பெண்ணை குத்தியுள்ளார்.
சம்பவத்தில் 23 வயதான கந்தசாமி சசிகலா என்ற பெண்ணே படுகாய மடைந்துள்ளார். காயம் அடைந்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.