எல்லை நிர்ணயத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிப்பு; வழக்கு தொடர முஸ்தீபு



அசோக பீரிஸின் தலை­மை­யி­லான எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ர­ணைக்­கு­ழுவின் எல்லை நிர்­ணய அறிக்கை சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாதிக்கும் வகையில் அமைந்­துள்­ளது.

எனவே எல்லை நிர்­ணய அறிக்கை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டதும் அதற்கு எதி­ராக நீதி­மன்றில் வழக்கு தொட­ர­வுள்­ள­தாக  கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்­சரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

எல்லை நிர்­ணய அறிக்கை மற்றும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், உள்­ளூ­ராட்சி வட்­டார எல்­லைகள் வகுப்­ப­திலும் மக்கள் தொகையைக் கணிப்­ப­திலும் பல தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளன.

சில பிரதேசங்களில் ஏற்­க­னவே அடர்த்­தி­யாக இருந்த முஸ்லிம் மக்­களின் சனத்­தொகைப் பரம்பல் இல்­லாமற் செய்­யப்­பட்டு சித­ற­டிக்­கப்­பட்­டுள்­ளது.

 இதனால் குறிப்­பிட்ட ஒரு சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு சவால்கள் ஏற்­பட்­டுள்­ளன.

முன்பு 06 ஆயி­ர­மாக இருந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பிர­தி­நி­தித்­துவம் தற்­போது 11 ஆயி­ர­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பிர­தி­நி­தித்­துவம் சிaறு­பான்மை மக்­களின் விகி­தா­சா­ரத்­துக்கு அமை­வாக கிட்­டுமா என்­ப­திலும் சந்­தே­க­முள்­ளது.

எனவே, எல்லை நிர்­ணய அறிக்கை அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டதும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு பாத­கங்கள் ஏற்­படும் விட­யங்­களைக் குறிப்­பிட்டு நீதி­மன்றின் தீர்ப்­பினை நாட­வுள்ளேன்.

வட்­டார முறையும் விகி­தா­சார முறையும் கலந்த புதிய கலப்பு உள்­ளூ­ராட்சி தேர்தல் முறையை சிறு­ கட்­சி­களும் சிறு­பான்மைக் கட்­சி­களும் ஏற்­கப்­போ­வ­தில்லை எனத் தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளன. இந்­தப்­பு­திய கலப்பு தேர்தல் முறையின் மூலம் சிறுப்­பான்மை மற்றும் சிறு கட்­சி­களின் பிர­தி­நி­தித்­துவம் வெகு­வாகப் பாதிக்­கப்­ப­ட­வுள்­ள­மையே இதற்குக் காரணம் என்றார்.

இவ் விவ­காரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் எஸ். சுபைதீன் கருத்து தெரி­விக்­கையில், எல்லை நிர்­ணய அறிக்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் அது தொடர்பில் ஆராய்ந்து வழக்குத் தொடர்வதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சட்டத்தரணிகள் குழுவொன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.