யூ.எல்.ஏ.மஜீட்
சாய்ந்தமருது 14
சாய்ந்தமருது 14
அம்பாறை மாவட்டம் 1940 களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பிரதேசமாக விளங்கியதுடன் மேற்படி மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் பெரும்பகுதியாகவும் விளங்கியது.

மேற்படி மாவட்டம் 3.263 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் சகல வளங்களும் காணப்படும் ஒரு பசுமை நிறைந்த பிரதேசமுமாகும்.
1925 களில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், வனாந்தர காடுகளாக காணப்பட்ட அம்பாறையெனும் பூமியை காடுவெட்டி களனி செய்து துப்புரவு செய்து கஷ்டப்பட்டு பொன் விளையும் பூமியாக மாற்றியதுடன், அக்காலத்தில் கொண்டவோட்டான் எனும் இடத்தில் பள்ளிவாசல் ஒன்றை உருவாக்கி ஒரு சிறு தொகை முஸ்லிம்கள் குடியமர்ந்ததுடன் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபடலாகினர்.
1936 ல் சிங்கள மந்திரி சபையின் ஊடாக பிரித்தானியாவின்1931 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட டொனமூர் அரசியல் பரவலாக்கல் காரணமாக சிங்கள பௌத்தர்களின் இனவாதத்தோடு இணைந்த அரசியல் ஆதிக்கம் படிப்படியாக உச்சநிலைக்கு வரலாகின.
இதன் ஊடாக 1944 காலப்பகுதியில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்குமுகமாக கல்லோயா நீர்ப்பாசனத் திட்டம் என்ற பெயரில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றத்தை உருவாக்கியதுடன் அன்று இப்பிரதேச பா.ம.உறுப்பினராக விளங்கிய எம்.எம்.மேர்ஸாவை அப்போதைய பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க வெளிநாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவென அனுப்பிய நிலையில் 1952 ல் இரவோடு இரவாக மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை குடியேற்றியதுடன் 44 கிராமங்கள் உருவாக்கப்பட்டு 38 கிராமங்கள் சிங்களவர்களுக்கும் 6 கிராமங்கள் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டன.
மேற்படி குடியேற்றத் திட்டத்தை முறியடிக்கும் முகமாக சில முஸ்லிம் தலைமைகள் முற்பட்டபோதும் அது முறியடிக்கப்பட்டதுடன் கொண்டவோட்டான் பள்ளி அமைந்திருக்கும் சிறு நிலப்பரப்பு மட்டும் போக ஏனைய இடங்கள் அனைத்தும் சேனநாயக்க சமுத்திரம், கல் ஓயா நீர்ப்பாசன திட்டம் எனப் பெயரிடப்பட்டு 1954 ல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அன்றிலிருந்து இனவாத நில ஆக்கிரமிப்புகளும் கெடுபிடிகளும் இம்மாவட்டத்தில் படிப்படியாக தலைதூக்க ஆரம்பித்தன.
மேலும் இம்மாவட்டத்தில் தீகவாபி பிரதேசத்துக்கு உட்பட்ட பல ஏக்கர் நிலப்பரப்பு முஸ்லிம்களின் பரம்பரை பரம்பரையாகக்கொண்டு விளங்கிய நிலப்பரப்போடு மேலும் பல காணிகள் சுவீகரிக்கப்பட்டும் வருவதனைக் காணலாம். பொத்துவில், அக்கரைப்பற்று, இறக்காமம், சின்ன விசாரை, பளவெளி, பொத்தானை, கம்மடு போன்ற முஸ்லிம்களின் காணிகளில் அத்துமீறிய சிலைவைப்புகள் நீதிமன்ற கட்டளைகளையும் மீறி சட்டங்கள் கையில் எடுத்தவர்களாக சில பிக்குகள் நீதியையும் சட்டத்தையும் மதியாது செயல்படுகின்றனர்.
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென சவூதி அரசினால் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளை 09 வருடங்கள் கழித்தும் கூட, பௌத்தர்களினால் புண்ணிய பூமி என்ற பெயரில் வழங்கக்கூடாது என்ற நீதிமன்றின் தடையுத்தரவு வழங்கப்பட்ட நிலையில் பாழடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.
மேற்படி மாவட்டத்தில் முஸ்லிம்கள் சுமார் 1,42,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்கின்றனர். 1996 ல் இப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்குரிய சில இடங்களைக் காட்டி பௌத்த குருமார்கள் மறைந்த மு.கா.தலைவர் அஷ்ரபிடம் சென்று மேற்படி விடயம் சம்பந்தமாக கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் அஷ்ரப்1000 வருடங்களுக்கு மேல் மேற்படி காணிகள் முடிக்குரிய காணிகளாக முஸ்லிம்களின் பாவனையில் இருந்து வருவதாகவும் மேற்படி விடயத்தில் ஆதாரமற்ற முறையில் முஸ்லிம்கள் மீது பழிகளை சுமத்தி சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தவேண்டாமென வேண்டியதற்கு இணங்க மேற்படி விடயம் அன்றோடு கைவிடப்பட்டது.
மேற்படி அம்பாறை மாவட்டத்தில் பறிபோன முஸ்லிம்களுக்குரிய காணிகளை மீட்டுத்தருவதாக 2001 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய சமாதான சூழலில் கூறப்பட்டது. ஆனால் 2002 ல் முஸ்லிம்களின் காணிகளை மீட்டுக் கொடுப்பதற்குப் பதிலாக முஸ்லிம் மக்களிடமிருந்து கப்பம், கொள்ளை, கொலை போன்ற விடயங்களில் செயற்படலாயினர்.
2000 ஆம் ஆண்டில் மு.கா.தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் இனவாத செயற்பாடுகள் படிப்படியாக துளிர் விட ஆரம்பித்த நிலையில் அதனை முளையிலேயே கிள்ளியெறியக் கூடிய அல்லது தடைசெய்யக்கூடிய அல்லது அதனை எதிர்த்து குரல்கொடுக்கக்கூடிய ஒரு துணிவு கொண்ட முஸ்லிம் தலைமைத்துவம் அஷ்ரபுக்குப் பின்னர் கிடையாமல் போனதன் காரணமாகவும் இப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பா.ம.உறுப்பினர்களின் அசமந்தப் போக்குகள் காரணமாகவும் இன்று இம்மாவட்டத்தில் நன்கு திட்டமிடப்பட்ட நிலையில் தமிழ், முஸ்லிம்களின் காணிகளில் வெளிப்படையாக எந்த எதிர்ப்புகளும் இல்லாத நிலையில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டும் அமைப்பதற்கு முயற்சிகளும் சிங்கள பௌத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதற்கு ஆதரவாக கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் 20,000 க்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஐ.தே.கட்சி பா.மா. உறுப்பினர் தயாகமகே மிகவும் முன் நின்று செயல்பட்டு வருவதனைக் காணலாம்.
அன்று மு.கா.தலைவர் அஷ்ரப் என்றால் எல்லோரிடத்திலும் மரியாதையோடு கூடிய ஒரு அச்சம் காணப்பட்டது. 1994 ல் சந்திரிகா அரசின் பங்காளியாக இணைந்து செயல்பட்டதால் இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் ஆட்சிகளை அமைக்கக்கூடிய சக்தியுடையவர்கள், எந்தவொரு சிங்கள அரசுகளும் அவர்களை புறம் தள்ளிவிட்டு ஆட்சி நடத்த முடியாது என்பதனை நிரூபித்தும் காட்டினார். ஆனால் இந்நாட்டில் முஸ்லிம்களின் அரசியல் ரீதியான வரலாற்றை நோக்கும் போது 1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் இனக்கலவரம் தொட்டு 1986 காலவரை ஒருவித பீதியுடனேயே காணப்பட்டு வந்துள்ளனர்.
இந்நாட்டில் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது தாக்குபவர்களை எதிர்த்துப் பேசவும் மோதவும் விரும்பாத வாயால் கூட எதிர்க்க முற்படாத நிலைமைகள் எமது முன்னைய முஸ்லிம் தலைமைகளுக்கு ஏற்பட்டிருந்தன. 1938 ல் சேர்.மாக்கான் மாக்கார் போன்ற தலைவர்கள் அன்றிருந்த அமைச்சரவையில் இருந்தனர். சேர்.மாக்கான் மாக்கார் அங்கு பேசிய ஒருசந்தர்ப்பத்தில் சிங்களவர்களுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை நாம் கேட்கவில்லை என்று கூறும் அளவுக்கு பாதிப்புகள் காணப்பட்டன.
டீ.எஸ்.சேனாநாயக்க பிரஜாவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அது முஸ்லிம்களை பாதித்த நிலையிலும் அதனை முஸ்லிம்கள் ஆதரித்தனர். 35,000 இந்திய முஸ்லிம்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டார்கள். இலங்கை முஸ்லிம்களும் அந்நியர்களாகக் கருதப்படும் ஒரு நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக வாய்மூடிமெளனிகளாக அதனை ஆதரிக்கின்ற தலைமைகளாக இருந்ததற்கு காரணம் இந்தப் பீதி மனப்பான்மைதான்.
அத்துடன் 1952 ல் எம்மவர்கள் விட்ட தவறுகளினாலேயே அம்பாறை பிரதேசம் முஸ்லிம்களின் பிடியிலிருந்து நழுவிச் செல்லலாகின. இலங்கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களின் பெரும் பகுதியாக விளங்குவது மேற்படி அம்பாறை மட்டுமே.
இங்கிருந்துதான் 1960 களில் முஸ்லிம்கள் தங்களை அடையாளப்படுத்தியவர்களாக அனைத்து இலங்கை இஸ்லாமிய அமைப்புகளும் இவ்வாண்டு தோற்றம் பெற்றதுடன், முஸ்லிம் மக்கள் தங்கள் இனத்தின் பாதுகாப்புக் கருதி இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட இன அடையாளத்தை நிலைநாட்டியதுடன் தமிழ் தங்களுடைய இயற்கையான மொழி அல்லவென்றும் அது பிற இனத்திலிருந்து நடைமுறை கருதி கடன் பெற்ற மொழி என்றும் வரைவிலக்கணம் கொடுத்தனர்.
இந்த வகையில் அரபி மொழியைத் தங்கள் இயல்மொழியாகக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து 1960 களில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தமது பொருளாதார, பண்பாட்டு விருத்தியைக் கண்டதுடன் இதன் அடிப்படையில் தாம் ஒரு தனித்துவமான சக்தியாக பலம்பெறலாகினர். இருந்த போதும் 1947 முதல் 1986 வரை இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசுகளோடு இணைந்து செயற்பட்ட போதும் முஸ்லிம்களின் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார விடயங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இருந்தும் அன்று பாராளுமன்றை அலங்கரித்துக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைவரும் சிங்கள பேரினவாத அரசியலில் வெறும் கைபொம்மைகளாகவே செயல்பட்டனர்.
அன்று எந்தவொரு முஸ்லிம் பா.ம.உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு ஆங்காங்கே சிங்கள பேரினவாதிகளினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிகளை தட்டிக்கேட்க துணிவற்றவர்களாகவே காணப்பட்டனர் என்பதே முஸ்லிம்களின் அரசியல் தலைவிதியாகக் காணப்பட்டது.
இவ்வாறான அடக்கு முறையிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஒரணியில் திரட்டும் முகமாகவும் முஸ்லிம்களுக்கென ஓர் தனித்துவமான அரசியல் இயக்கம் வேண்டும், முதுகெலும்புடன் பேசுகின்ற திராணி வேண்டும் என்றுதான் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம்களுக்கென முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தார். எதற்கும் பயப்படாமல் எமது உரிமைகளைத் தட்டிக் கேட்கின்ற ஓர் ஸ்திரமான நிலையை தோற்றுவித்தது. உண்மையாகவே இந்நாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் என்று உதயமாகியதோ அன்றிலிருந்து அஷ்ரபின் மரணம்வரை அஷ்ரப் என்றால் ஒரு மரியாதையுடன் கூடிய கண்ணியம் காணப்பட்டது.
1994 ல் சந்திரிகாவின் ஆட்சியில் பங்காளியாக மு.கா.செயற்பட்ட போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களின் தனித்துவம், பேரம் பேசும் சக்தி போன்றவற்றை இழக்கும் வகையில் அஷ்ரப் ஒரு போதும் செயற்படவில்லை. ஆனால் அவரின் மரணத்தின் பின்னர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களினால் மு.கா.வின் கொள்கை முதல் சகல தனித்துவ அடையாளங்களும் பேரினவாத அரசுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டதுடன் "நக்குண்டார் நாவிழந்தார்" என்ற நிலையில் சிங்கள அரசுகள் வழங்கும் இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக சோரம்போனவர்களாக முஸ்லிம் காங்கிரஸை நான்கு கூறுகளாக உடைத்து, முஸ்லிம் சமூகத்தை வெறும் ஒரு சடப்பொருளாக மாற்றி, நடைமுறைக்கு சாத்தியப்படாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அவர்களை நம்பவைத்து ஏமாற்றும் ஒரு ஸ்திரமற்ற ஓர் அரசியலையே நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நாட்டில் சமகால அரசியலில் முஸ்லிம்களின் மத்தியில் தோன்றிய அரசியல்வாதிகளில் பாராளுமன்றிலும் அதன் வெளியேயும் முஸ்லிம்களுக்காக மிகவும் துணிவோடும் எந்த அச்சமுமின்றியும் குரல் எழுப்பியவர் என்றால் அது அஷ்ரப் தான் என்றால் மிகையாகாது.
ஆனால், 2010 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கெதிரான எத்தனையோ வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. அரங்கேற்றியும் வருகின்றனர். ஆனால் இவற்றுக்கெதிராக எந்த முஸ்லிம் பா.உறுப்பினர்களும் மிகவும் துணிவு கொண்டு அதனை தடுக்கும் வகையில் காட்டமானதொரு கண்டனம் அல்லது குரல் கொடுத்தார்களா என்றால் இதுவரையிலும் அதுவெறும் பூஜ்யம் மட்டும்தான்.
கடந்த ராஜபக் ஷ அரசில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இனிமேல் ஒரு போதும் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே கடந்த 2015 ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீது பூரண நம்பிக்கையுடன் தமிழ், முஸ்லிம்களின் வாக்குகளினால் இந்நாட்டில் நல்லாட்சியை அமர்த்தலானார்கள்.
ஆனால் 1 - 1/2 வருடங்கள் சமாதான காற்றை சுவாசித்த நிலையில் நாங்கள் அனைவரும் ஒரே புற்றில் வளர்ந்த பாம்புகள்தான் என்பதனை பறைசாற்றும் வகையில் தற்போதைய நல்லாட்சியிலும் இனவாத கெடுபிடிகள் சற்றும் ஓய்வில்லாமல் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
கிழக்கில் 54 இடங்கள் தொல்பொருள் இடங்களாக இனம் காட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 300 க்கும் மேற்பட்ட இடங்கள் காணப்படுவதாகவும் அதனை பாதுகாக்கும் வகையில் பொலிஸாரையும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர்களையும் பயன்படுத்தப் போவதாகவும் அண்மையில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேற்படி அறிவித்தல் கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் மத்தியில் பாரிய அச்சத்தையும் ஒரு விதமான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
மேற்படி இனவாத கெடுபிடிகள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் பாரம்பரிய நிலப்பரப்புகள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக இனவாத அடக்கு முறைக்குள் காவு கொள்ளப்படும் ஒரு நிலையை காணக்கூடியதாய் உள்ளது.இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்குவது எம்மவர்கள் அன்று விட்டதவறும் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையற்ற சீரழிந்த, அரசியல் ஸ்திரமற்ற, எந்தக் கொள்கைகளுமற்ற செயற்பாடுகளே.
இனவாதப் போக்குடையவர்கள் எம்மை மிகவும் இலகுவாக தாக்குவதற்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதுதான் யதார்த்தமாகும்.
எது எப்படியிருப்பினும் இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடிக்க வேண்டுமாயின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் துஆப் பிரார்த்தனையோடு கூடிய பொறுமையும் இன்று சின்னாபின்னமாக பிரிந்து சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் சன்மார்க்க போதகர்களும் ஒன்று பட்டால் மட்டுமே முஸ்லிம் சமூகம் இதிலிருந்து விடுதலையடைய முடியும்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்படாத நிலையில் இன்னும் ஐம்பது வருடங்கள் சென்றாலும் இனவாதிகளின் ஆக்கிரமிப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
மேற்படி மாவட்டம் 3.263 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் சகல வளங்களும் காணப்படும் ஒரு பசுமை நிறைந்த பிரதேசமுமாகும்.
1925 களில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், வனாந்தர காடுகளாக காணப்பட்ட அம்பாறையெனும் பூமியை காடுவெட்டி களனி செய்து துப்புரவு செய்து கஷ்டப்பட்டு பொன் விளையும் பூமியாக மாற்றியதுடன், அக்காலத்தில் கொண்டவோட்டான் எனும் இடத்தில் பள்ளிவாசல் ஒன்றை உருவாக்கி ஒரு சிறு தொகை முஸ்லிம்கள் குடியமர்ந்ததுடன் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபடலாகினர்.
1936 ல் சிங்கள மந்திரி சபையின் ஊடாக பிரித்தானியாவின்1931 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட டொனமூர் அரசியல் பரவலாக்கல் காரணமாக சிங்கள பௌத்தர்களின் இனவாதத்தோடு இணைந்த அரசியல் ஆதிக்கம் படிப்படியாக உச்சநிலைக்கு வரலாகின.
இதன் ஊடாக 1944 காலப்பகுதியில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்குமுகமாக கல்லோயா நீர்ப்பாசனத் திட்டம் என்ற பெயரில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றத்தை உருவாக்கியதுடன் அன்று இப்பிரதேச பா.ம.உறுப்பினராக விளங்கிய எம்.எம்.மேர்ஸாவை அப்போதைய பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க வெளிநாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவென அனுப்பிய நிலையில் 1952 ல் இரவோடு இரவாக மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை குடியேற்றியதுடன் 44 கிராமங்கள் உருவாக்கப்பட்டு 38 கிராமங்கள் சிங்களவர்களுக்கும் 6 கிராமங்கள் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டன.
மேற்படி குடியேற்றத் திட்டத்தை முறியடிக்கும் முகமாக சில முஸ்லிம் தலைமைகள் முற்பட்டபோதும் அது முறியடிக்கப்பட்டதுடன் கொண்டவோட்டான் பள்ளி அமைந்திருக்கும் சிறு நிலப்பரப்பு மட்டும் போக ஏனைய இடங்கள் அனைத்தும் சேனநாயக்க சமுத்திரம், கல் ஓயா நீர்ப்பாசன திட்டம் எனப் பெயரிடப்பட்டு 1954 ல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அன்றிலிருந்து இனவாத நில ஆக்கிரமிப்புகளும் கெடுபிடிகளும் இம்மாவட்டத்தில் படிப்படியாக தலைதூக்க ஆரம்பித்தன.
மேலும் இம்மாவட்டத்தில் தீகவாபி பிரதேசத்துக்கு உட்பட்ட பல ஏக்கர் நிலப்பரப்பு முஸ்லிம்களின் பரம்பரை பரம்பரையாகக்கொண்டு விளங்கிய நிலப்பரப்போடு மேலும் பல காணிகள் சுவீகரிக்கப்பட்டும் வருவதனைக் காணலாம். பொத்துவில், அக்கரைப்பற்று, இறக்காமம், சின்ன விசாரை, பளவெளி, பொத்தானை, கம்மடு போன்ற முஸ்லிம்களின் காணிகளில் அத்துமீறிய சிலைவைப்புகள் நீதிமன்ற கட்டளைகளையும் மீறி சட்டங்கள் கையில் எடுத்தவர்களாக சில பிக்குகள் நீதியையும் சட்டத்தையும் மதியாது செயல்படுகின்றனர்.
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென சவூதி அரசினால் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளை 09 வருடங்கள் கழித்தும் கூட, பௌத்தர்களினால் புண்ணிய பூமி என்ற பெயரில் வழங்கக்கூடாது என்ற நீதிமன்றின் தடையுத்தரவு வழங்கப்பட்ட நிலையில் பாழடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.
மேற்படி மாவட்டத்தில் முஸ்லிம்கள் சுமார் 1,42,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்கின்றனர். 1996 ல் இப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்குரிய சில இடங்களைக் காட்டி பௌத்த குருமார்கள் மறைந்த மு.கா.தலைவர் அஷ்ரபிடம் சென்று மேற்படி விடயம் சம்பந்தமாக கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் அஷ்ரப்1000 வருடங்களுக்கு மேல் மேற்படி காணிகள் முடிக்குரிய காணிகளாக முஸ்லிம்களின் பாவனையில் இருந்து வருவதாகவும் மேற்படி விடயத்தில் ஆதாரமற்ற முறையில் முஸ்லிம்கள் மீது பழிகளை சுமத்தி சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தவேண்டாமென வேண்டியதற்கு இணங்க மேற்படி விடயம் அன்றோடு கைவிடப்பட்டது.
மேற்படி அம்பாறை மாவட்டத்தில் பறிபோன முஸ்லிம்களுக்குரிய காணிகளை மீட்டுத்தருவதாக 2001 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய சமாதான சூழலில் கூறப்பட்டது. ஆனால் 2002 ல் முஸ்லிம்களின் காணிகளை மீட்டுக் கொடுப்பதற்குப் பதிலாக முஸ்லிம் மக்களிடமிருந்து கப்பம், கொள்ளை, கொலை போன்ற விடயங்களில் செயற்படலாயினர்.
2000 ஆம் ஆண்டில் மு.கா.தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் இனவாத செயற்பாடுகள் படிப்படியாக துளிர் விட ஆரம்பித்த நிலையில் அதனை முளையிலேயே கிள்ளியெறியக் கூடிய அல்லது தடைசெய்யக்கூடிய அல்லது அதனை எதிர்த்து குரல்கொடுக்கக்கூடிய ஒரு துணிவு கொண்ட முஸ்லிம் தலைமைத்துவம் அஷ்ரபுக்குப் பின்னர் கிடையாமல் போனதன் காரணமாகவும் இப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பா.ம.உறுப்பினர்களின் அசமந்தப் போக்குகள் காரணமாகவும் இன்று இம்மாவட்டத்தில் நன்கு திட்டமிடப்பட்ட நிலையில் தமிழ், முஸ்லிம்களின் காணிகளில் வெளிப்படையாக எந்த எதிர்ப்புகளும் இல்லாத நிலையில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டும் அமைப்பதற்கு முயற்சிகளும் சிங்கள பௌத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதற்கு ஆதரவாக கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் 20,000 க்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஐ.தே.கட்சி பா.மா. உறுப்பினர் தயாகமகே மிகவும் முன் நின்று செயல்பட்டு வருவதனைக் காணலாம்.
அன்று மு.கா.தலைவர் அஷ்ரப் என்றால் எல்லோரிடத்திலும் மரியாதையோடு கூடிய ஒரு அச்சம் காணப்பட்டது. 1994 ல் சந்திரிகா அரசின் பங்காளியாக இணைந்து செயல்பட்டதால் இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் ஆட்சிகளை அமைக்கக்கூடிய சக்தியுடையவர்கள், எந்தவொரு சிங்கள அரசுகளும் அவர்களை புறம் தள்ளிவிட்டு ஆட்சி நடத்த முடியாது என்பதனை நிரூபித்தும் காட்டினார். ஆனால் இந்நாட்டில் முஸ்லிம்களின் அரசியல் ரீதியான வரலாற்றை நோக்கும் போது 1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் இனக்கலவரம் தொட்டு 1986 காலவரை ஒருவித பீதியுடனேயே காணப்பட்டு வந்துள்ளனர்.
இந்நாட்டில் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது தாக்குபவர்களை எதிர்த்துப் பேசவும் மோதவும் விரும்பாத வாயால் கூட எதிர்க்க முற்படாத நிலைமைகள் எமது முன்னைய முஸ்லிம் தலைமைகளுக்கு ஏற்பட்டிருந்தன. 1938 ல் சேர்.மாக்கான் மாக்கார் போன்ற தலைவர்கள் அன்றிருந்த அமைச்சரவையில் இருந்தனர். சேர்.மாக்கான் மாக்கார் அங்கு பேசிய ஒருசந்தர்ப்பத்தில் சிங்களவர்களுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை நாம் கேட்கவில்லை என்று கூறும் அளவுக்கு பாதிப்புகள் காணப்பட்டன.
டீ.எஸ்.சேனாநாயக்க பிரஜாவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அது முஸ்லிம்களை பாதித்த நிலையிலும் அதனை முஸ்லிம்கள் ஆதரித்தனர். 35,000 இந்திய முஸ்லிம்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டார்கள். இலங்கை முஸ்லிம்களும் அந்நியர்களாகக் கருதப்படும் ஒரு நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக வாய்மூடிமெளனிகளாக அதனை ஆதரிக்கின்ற தலைமைகளாக இருந்ததற்கு காரணம் இந்தப் பீதி மனப்பான்மைதான்.
அத்துடன் 1952 ல் எம்மவர்கள் விட்ட தவறுகளினாலேயே அம்பாறை பிரதேசம் முஸ்லிம்களின் பிடியிலிருந்து நழுவிச் செல்லலாகின. இலங்கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களின் பெரும் பகுதியாக விளங்குவது மேற்படி அம்பாறை மட்டுமே.
இங்கிருந்துதான் 1960 களில் முஸ்லிம்கள் தங்களை அடையாளப்படுத்தியவர்களாக அனைத்து இலங்கை இஸ்லாமிய அமைப்புகளும் இவ்வாண்டு தோற்றம் பெற்றதுடன், முஸ்லிம் மக்கள் தங்கள் இனத்தின் பாதுகாப்புக் கருதி இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட இன அடையாளத்தை நிலைநாட்டியதுடன் தமிழ் தங்களுடைய இயற்கையான மொழி அல்லவென்றும் அது பிற இனத்திலிருந்து நடைமுறை கருதி கடன் பெற்ற மொழி என்றும் வரைவிலக்கணம் கொடுத்தனர்.
இந்த வகையில் அரபி மொழியைத் தங்கள் இயல்மொழியாகக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து 1960 களில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தமது பொருளாதார, பண்பாட்டு விருத்தியைக் கண்டதுடன் இதன் அடிப்படையில் தாம் ஒரு தனித்துவமான சக்தியாக பலம்பெறலாகினர். இருந்த போதும் 1947 முதல் 1986 வரை இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசுகளோடு இணைந்து செயற்பட்ட போதும் முஸ்லிம்களின் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார விடயங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இருந்தும் அன்று பாராளுமன்றை அலங்கரித்துக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைவரும் சிங்கள பேரினவாத அரசியலில் வெறும் கைபொம்மைகளாகவே செயல்பட்டனர்.
அன்று எந்தவொரு முஸ்லிம் பா.ம.உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு ஆங்காங்கே சிங்கள பேரினவாதிகளினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிகளை தட்டிக்கேட்க துணிவற்றவர்களாகவே காணப்பட்டனர் என்பதே முஸ்லிம்களின் அரசியல் தலைவிதியாகக் காணப்பட்டது.
இவ்வாறான அடக்கு முறையிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஒரணியில் திரட்டும் முகமாகவும் முஸ்லிம்களுக்கென ஓர் தனித்துவமான அரசியல் இயக்கம் வேண்டும், முதுகெலும்புடன் பேசுகின்ற திராணி வேண்டும் என்றுதான் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம்களுக்கென முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தார். எதற்கும் பயப்படாமல் எமது உரிமைகளைத் தட்டிக் கேட்கின்ற ஓர் ஸ்திரமான நிலையை தோற்றுவித்தது. உண்மையாகவே இந்நாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் என்று உதயமாகியதோ அன்றிலிருந்து அஷ்ரபின் மரணம்வரை அஷ்ரப் என்றால் ஒரு மரியாதையுடன் கூடிய கண்ணியம் காணப்பட்டது.
1994 ல் சந்திரிகாவின் ஆட்சியில் பங்காளியாக மு.கா.செயற்பட்ட போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களின் தனித்துவம், பேரம் பேசும் சக்தி போன்றவற்றை இழக்கும் வகையில் அஷ்ரப் ஒரு போதும் செயற்படவில்லை. ஆனால் அவரின் மரணத்தின் பின்னர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களினால் மு.கா.வின் கொள்கை முதல் சகல தனித்துவ அடையாளங்களும் பேரினவாத அரசுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டதுடன் "நக்குண்டார் நாவிழந்தார்" என்ற நிலையில் சிங்கள அரசுகள் வழங்கும் இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக சோரம்போனவர்களாக முஸ்லிம் காங்கிரஸை நான்கு கூறுகளாக உடைத்து, முஸ்லிம் சமூகத்தை வெறும் ஒரு சடப்பொருளாக மாற்றி, நடைமுறைக்கு சாத்தியப்படாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அவர்களை நம்பவைத்து ஏமாற்றும் ஒரு ஸ்திரமற்ற ஓர் அரசியலையே நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நாட்டில் சமகால அரசியலில் முஸ்லிம்களின் மத்தியில் தோன்றிய அரசியல்வாதிகளில் பாராளுமன்றிலும் அதன் வெளியேயும் முஸ்லிம்களுக்காக மிகவும் துணிவோடும் எந்த அச்சமுமின்றியும் குரல் எழுப்பியவர் என்றால் அது அஷ்ரப் தான் என்றால் மிகையாகாது.
ஆனால், 2010 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கெதிரான எத்தனையோ வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. அரங்கேற்றியும் வருகின்றனர். ஆனால் இவற்றுக்கெதிராக எந்த முஸ்லிம் பா.உறுப்பினர்களும் மிகவும் துணிவு கொண்டு அதனை தடுக்கும் வகையில் காட்டமானதொரு கண்டனம் அல்லது குரல் கொடுத்தார்களா என்றால் இதுவரையிலும் அதுவெறும் பூஜ்யம் மட்டும்தான்.
கடந்த ராஜபக் ஷ அரசில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இனிமேல் ஒரு போதும் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே கடந்த 2015 ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீது பூரண நம்பிக்கையுடன் தமிழ், முஸ்லிம்களின் வாக்குகளினால் இந்நாட்டில் நல்லாட்சியை அமர்த்தலானார்கள்.
ஆனால் 1 - 1/2 வருடங்கள் சமாதான காற்றை சுவாசித்த நிலையில் நாங்கள் அனைவரும் ஒரே புற்றில் வளர்ந்த பாம்புகள்தான் என்பதனை பறைசாற்றும் வகையில் தற்போதைய நல்லாட்சியிலும் இனவாத கெடுபிடிகள் சற்றும் ஓய்வில்லாமல் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
கிழக்கில் 54 இடங்கள் தொல்பொருள் இடங்களாக இனம் காட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 300 க்கும் மேற்பட்ட இடங்கள் காணப்படுவதாகவும் அதனை பாதுகாக்கும் வகையில் பொலிஸாரையும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர்களையும் பயன்படுத்தப் போவதாகவும் அண்மையில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேற்படி அறிவித்தல் கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் மத்தியில் பாரிய அச்சத்தையும் ஒரு விதமான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
மேற்படி இனவாத கெடுபிடிகள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் பாரம்பரிய நிலப்பரப்புகள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக இனவாத அடக்கு முறைக்குள் காவு கொள்ளப்படும் ஒரு நிலையை காணக்கூடியதாய் உள்ளது.இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்குவது எம்மவர்கள் அன்று விட்டதவறும் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையற்ற சீரழிந்த, அரசியல் ஸ்திரமற்ற, எந்தக் கொள்கைகளுமற்ற செயற்பாடுகளே.
இனவாதப் போக்குடையவர்கள் எம்மை மிகவும் இலகுவாக தாக்குவதற்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதுதான் யதார்த்தமாகும்.
எது எப்படியிருப்பினும் இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடிக்க வேண்டுமாயின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் துஆப் பிரார்த்தனையோடு கூடிய பொறுமையும் இன்று சின்னாபின்னமாக பிரிந்து சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் சன்மார்க்க போதகர்களும் ஒன்று பட்டால் மட்டுமே முஸ்லிம் சமூகம் இதிலிருந்து விடுதலையடைய முடியும்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்படாத நிலையில் இன்னும் ஐம்பது வருடங்கள் சென்றாலும் இனவாதிகளின் ஆக்கிரமிப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.