இளை­ஞர்கள் மத்­தியில் பாபுல்.. வரான்ஸ் பாவனை அதி­க­ரிப்பு; சாகல கவலை



பாட­சா­லை­க­ளுக்கு வெளியே இளை­ஞர்கள் மத்­தியில் பாபுல், வரான்ஸ் மற்றும் போதைப் பொருள் பாவ­னைகள் அதி­க­ரித்­துள்­ளன.

இதனை தடுக்க அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை  முடுக்கி விட்­டுள்­ளது என்று  அமைச்சர் சாகல ரத்­னா­யக்க நேற்று சபையில் தெரி­வித்தார். 

ஐக்­கிய தேசியக் கட்­சியின்  எம்.பி.யான புத்­திக பத்­தி­ரண  செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி நேரத்தின்போது சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­னா­ய­க­விடம்  எழுப்­பிய கேள்­விக்குப்  பதி­ல­ளித்தபோதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

கஞ்சா, அபின், போதை மாத்­தி­ரைகள், பாணி­ம­ருந்து மற்றும் அத­னை­யொத்த போதைப் பொருட்கள் சமூ­கத்தில் துரி­த­மாக பர­வி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டடே கேள்வி எழுப்­பப்­பட்­டது. 

அமைச்சர் சாகல ரத்­னா­யக்க வழங்­கிய பதிலில் மேலும் தெரி­விக்­கையில்; 
பாட­சா­லை­க­ளுக்குள் போதை­ப் பொருள் பாவனை தொடர்­பாக தக­வல்கள் கிடைக்­க­வில்லை. ஆனால் பாட­சா­லை­க­ளுக்கு வெளியே உல்­லாசப் பிர­யாணத்துறை ஹோட்­டல்கள் உள்ள பிர­தே­சங்­க­ளிலும் சில பிர­பல்­ய­மான இடங்­க­ளிலும் இளை­ஞர்கள் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வது தொடர்பில் தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

இது அதி­க­ரித்து செல்லும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. 
எனவே, இதனை கட்­டுப்­ப­டுத்­தவும் தடுப்­ப­தற்கும் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன என அமைச்சர் சாகல ரத்­னா­யக்க தெரி­வித்தார்.

இதன்­போது குறுக்­கிட்ட புத்­திக பத்­தி­ரண எம்.பி. சில பாட­சா­லை­களில் உயர்வகுப்பு மாண­வர்கள் கஞ்சா பாவித்த பின்னர் வகுப்­ப­றை­க­ளுக்கு வரு­வ­தாக எனக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. இது தொடர்பில் உங்­க­ளுக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­க­வில்­லையா என அமைச்சரிடம் கேட்டார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் சாகல ரத்னாயக்க எம்.பி. சொன்னது போன்று  முறைப்பாடுகள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
(விடிவெள்ளி)