ஹக்கீம் செய்த அநியாயத்தை மக்கா சென்று அல்லாஹ்விடம் முறையிட்டேன்; ஹசனலி



அஸ்லம் மௌலானா
"முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எனக்கு இழைத்­துள்ள அநி­யா­யங்­களை புனித மக்­கா­வுக்கு சென்று அல்­லாஹ்­விடம் முறை­யிட்­டுள்ளேன். அதற்­கு­ரிய தீர்ப்பை வழங்கும் பொறுப்பை அல்­லாஹ்­வி­டமே ஒப்­ப­டைத்து விட்டேன்" என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும் முன்னாள் ரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹஸன் அலி தெரி­வித்தார்.
நிந்­தவூர் ஜும்ஆப் பள்­ளி­வா­சலில்  புதன்­கி­ழமை இரவு நடை­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.
தொடர்ந்து உரை­யாற்­றிய அவர்  மேலும் தெரி­விக்­கையில்; "தற்­போ­தைய தலைவர் ரவூப்  ஹக்கீம் என்­னையும் சமூ­கத்­தையும் கடு­மை­யாக ஏமாற்­றி­யுள்ளார். இதனால் நான் மிகவும் நொந்­து துன்­பப்­பட்டேன்.
இந்த அநி­யா­யங்­களை உம்­ரா­வுக்கு சென்று புனித மக்­காவில் அல்­லாஹ்­விடம் ஒப்­ப­டைத்­துள்ளேன்.
இனி அந்த வல்ல நாயகன் அல்லாஹ் பார்த்துக் கொள்­ளட்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் தலை­மைக்கு அடுத்த அதி­கார நிலையில் இருந்த செய­லாளர் நாயகம் பதவி இன்று தலை­மைத்­து­வத்­தினால் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இப்­ப­த­விக்­கு­ரிய அதி­கா­ரங்கள் யாவும் தலை­மை­யினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டு செயலாளர் எனும் பதவிக்குரியவர் தலைமையின் கால்களில் மண்டியிடச் செய்யப்பட்டுள்ளது என்றார்.