.
இத்தகைய கருத்துப் பின்புலத்திலேயே நாம் அண்மையில் ஆதம் நபியின் பாதச்சுவடை பார்ப்பதற்காக மலை ஏறினோம். “உங்கள் வரலாற்றை நிறுவுவதற்கு வேறு இடத்தை பார்த்துக்கொள்ளுங்கள்” என சொன்னது போல் இருந்தது அங்குள்ள நிலை. அங்கே முழுமையாக பௌத்த மேலாதிக்கம் நிரம்பியுள்ளது. புத்தரின் பாதம் என்பது மட்டுமே மீள மீள வலியுறுத்தப்படுகின்றது.
பாவா ஆதம் மலை மனித இன வரலாற்றின் பல
இரகசியங்கள் புதைந்துள்ள இடம். சர்வதேச ஆங்கில இலக்கியங்களில்
Adam's peak என்றும் அரபு இலக்கியங்களில் “ஜபல் ஆதம்” என்றும்
அழைக்கப்படும் இந்த இடம் இலங்கையில் அமைந்துள்ளமை நாமறிந்ததே. ஆதி
மனிதனும் முதல் மனிதனுமான ஆதமின் பாதத்தின் தடயம் அந்த மலையின்
உச்சியில் பதிந்துள்ளதாக இலக்கியங்கள் பரப்புரை செய்கின்றன.மட்டுமன்றி வாய்வழி மூலம் சொல்லப்பட்டும், நம்பப்பட்டும் வரும்
ஐதீகமாக அது இன்று வரை இருந்து வருகின்றது.
இறை வேதங்களை தமது
அதிகாரப்பிரதிகளாக கொண்டிருக்கும் செமிட்டிக் மதங்களான யூதம்,
கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியனவே “முதல் மனிதன்”என்ற கோட்பாட்டை
நம்புகின்றன.முதல் மனிதன் ஆதம்தான் என்பதை மூன்று மதங்களின் வேத
நூல்களும் கூறி நிற்கின்றன. முதல் மனிதனை அல்குர்ஆன் ஆதம் என பெயர்
குறித்து அழைக்கின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கையின் படி ஆதம் முதல்
மனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாவா ஆதம் மலையை முஸ்லிம்களின்
வரலாற்று ஆதாரமாக முன்வைக்க முனையும் போது எழுகின்ற மிக முக்கியமான
ஒரு பிரச்சினை உள்ளது. அதுதான் அல்குர்அன், அல்ஹதீஸ் ஆகிய மூலாதார
நூல்களின் ஆதார வழியால் அது ஆதமின் கால் தடம்தான் என
நிரூபிக்கப்படவில்லை என்பது. உண்மையில் இஸ்லாத்தின்
மூலப்பிரதிகளில் அதற்கான ஆதாரம் இல்லை என்பது உண்மையே. ஆயினும் அது
அப்படித்தான் நிறுவப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றே நான்
கருதுகின்றேன்.
ஏனெனில், ஆதம் நபி முதல் மனிதர் என்பது
அல்குர்ஆனின் வழி வந்த நம்பிக்கையாகும். ஆதம் நபி முதல் மனிதர் என்பதை
நிறுவுவதே அது ஆதமின் காலடித் தடம் என்பதை நிறுவ போதுமானது. இது
வரலாறு, தொல்பொருளியல் ஆய்வுகளினூடாக நிறுவப்பட்டாலே
போதுமானது. இமாம் தபரி, ஆதம் நபி செரண்டிப்பிலே இறங்கினார் என
எழுதுகிறார். அரபு உலகிலும் அதற்கு வெளியிலும் ஆதம் நபி பற்றிய
எழுத்தாக்கங்களில் ஆதம் மலையும் இலங்கையும் பற்றிய குறிப்புக்கள்
இருப்பதானது ஆதம் நபியின் பாதச்சுவடு பற்றிய நம்பிக்கை ஒரு பொதுவான
உள்ளுணர்வாக மாறிவிட்டது எனலாம்.
அது வெறும் வரலாற்று உணர்வேயன்றி
புனிதப்படுத்தும் நிலையல்ல. பாவா ஆதம் மலை புனித இடம் அல்லது
இஸ்லாமின் மூன்று புனிதத்தலங்களை போன்ற இடம் என கருதுவதும் இல்லை
என்ற நிலையில் அதனை எமது வரலாற்றை நிறுவுவதற்கான ஆதார வழியாகக்
கொள்வதில் பிழையில்லை.
இலங்கையில் உள்ள தேசிய சமூகங்களில்
அரசியல் சமூகமாக விளங்கும் இலங்கை சோனக முஸ்லிம்களே முதல் மனிதர்
கோட்பாட்டு நம்பிக்கை கொண்டோராக விளங்குகின்றனர். ஆகையால் ஏனையோரை
விட அவ்விடயத்திற்கான தர்க்க ரீதியான உரித்துடையோர் நாம்தான் என
குரல் கொடுப்பதில் எந்த தவறுமில்லை.
ஆதமின் பாதம் குறித்த நம்பிக்கையானது
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் வருகைக்கு முன்னிருந்தே தொடர்ந்து வரும்
புராதன நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் அடியேதான் ஆதமின்
பாதச்சுவடு இலங்கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இலங்கையை
தவிர வேறெங்கும் ஆதமின் பாதச்சுவடு இருப்பதாக பலமான வாதங்கள்,
நம்பிக்கைகள் இல்லை என்பதால் இலங்கையில் இருப்பது ஆதமின் பாதச்சுவடு
என கூறலாம்.
பொதுவாக ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது
ஆதாரத்தை அதன் அறிவியல் தர்க்கங்களின் அடிப்படையில் புரிந்துகொள்வதே
போதுமானது. சிலர் ஆதமின் மற்றைய பாதம் எங்கிருக்கின்றது என வினா
தொடுப்பர். ஒரு வரலாற்று நிகழ்வு அது எதன் மீது
கட்டமைக்கப்படுகின்றதோ அதனை நிறுவுவதை தவிர அதிலிருந்து
பிரியும் துணைக் காரணிகளை அல்லது சந்தேகங்களை நிறுவுவது
அவசியமில்லை. ஏனெனில் அது ஒரு வரலாறு என்பதே அதற்குரிய
காரணமாகும்.
வரலாற்றை நிகழ்கால நிலையுடன் ஒப்பிட
முடியாது. நிகழ்காலத்தில் ஒருவரின் ஒரு காலடித் தடம் இதுதான் எனக் கூற
மற்றைய காலடி எங்கே என்று வினா தொடுக்கலாம். அதற்கான ஆதராமும்
முன்வைக்கப்பட வேண்டும். ஏனெனில் அது சொல்லப்படுபவரினதும்
கேட்கப்படுபவரினதும் நிகழ்கால நிலை. வரலாற்று நிகழ்வொன்றுக்கு
அப்படியான வாதங்கள் அவசியமில்லை.
பாவா ஆதம் மலையின் இன்றைய நிலை
இத்தகைய கருத்துப் பின்புலத்திலேயே நாம் அண்மையில் ஆதம் நபியின் பாதச்சுவடை பார்ப்பதற்காக மலை ஏறினோம். “உங்கள் வரலாற்றை நிறுவுவதற்கு வேறு இடத்தை பார்த்துக்கொள்ளுங்கள்” என சொன்னது போல் இருந்தது அங்குள்ள நிலை. அங்கே முழுமையாக பௌத்த மேலாதிக்கம் நிரம்பியுள்ளது. புத்தரின் பாதம் என்பது மட்டுமே மீள மீள வலியுறுத்தப்படுகின்றது.
இந்துக்களின் நம்பிக்கையின் படி
சிவனின் பாதமென்ற உள்ளுணர்வோ முஸ்லிம்களுக்கு ஆதமின் பாதம் என்ற
உள்ளுணர்வோ வர வாய்ப்பே அங்கு இருக்கவில்லை. இலங்கை சோனக பண்பாட்டு
அடையாளத்தின் வாடையை கூட அங்கு நுகரமுடியவில்லை. இலங்கை புத்தரின்
தேசம் என்பதை நிறுவிக்கொள்வதற்கான ஓர் இடமாகவே அது இப்போது காட்சி
தருகிறது.
பாவா ஆதம் மலைக்கு ஏறும் வரை பௌத்தம் ஒரு
மதம் என்றே நான் கருதியிருந்தேன். ஆனால் அது பொய்த்து போனது. இலங்கையில்
பௌத்தம் என்பது பௌத்த மேலாதிக்க வாத அரசியலின் ஓர் சக்தி வாய்ந்த
கருவியாக உள்ளது புரிந்து போனது.
Adam's paek எங்குள்ளது என எங்கள் மாணவர்களில் ஒருவர் கேட்டபோது “இங்கு அப்படி ஒன்றும் இல்லை.
Adam's paek எங்குள்ளது என எங்கள் மாணவர்களில் ஒருவர் கேட்டபோது “இங்கு அப்படி ஒன்றும் இல்லை.
புத்தரின் பாதம் மட்டுமே உள்ளது.
இப்படி கேட்டு குழப்புவதுதான் உங்கள் வேலை” என அந்த பாதுகாப்பு
உத்தியோகத்தர் சொன்னமை இன்னும் அதிர்ச்சி அடையச் செய்தது. மலைக்கு
ஏறும் வழியில் ஓரிடத்தில் ஆங்கிலத்தில் “ Not Adam's Peak"என
எழுதப்பட்டிருந்தமையானது எந்தளவு பௌத்த மேலாதிக்க வாதம் அங்கு
நிலைகொண்டுள்ளது என்பதை அறிய போதுமானது.
உலகளவில் Adam's Peak என்ற பெயரில்
பிரபலமான சொற்றொடரை மறுதலித்து அதன் மீது புத்தரின் வரலாற்றை
நிறுவுவதற்கு பிரயத்தனப்பட்டிருப்பது மிக மோசமான செயலாகும்.இது
தொடர்பாக நான் எனது முக நூல் பக்கத்தில் “இனி பாவா ஆதம் மலைக்கு
சிங்களவர் பாசையில் சிறிபாதமலை என்று சொல்வதே பொருத்தம்” என
எழுதியிருந்தேன். அதற்கு எதிர்வினையாக தோழர் ஒருவர்
எழுதியிருந்ததை இங்கு குறிப்பிட்டு காட்டுவது பொருத்தம் என
கருதுகிறேன்.
“இந்தப் பதிவு நம்பிக்கையீனத்தின்
பிரதியாக தெரிந்தாலும் அதுவல்ல நிஜம். ஒரு பூர்வீகத்தின் எச்சம்
எப்படியும் வேறு காலனித்துவங்களின் கீழ் அகப்படலாம். ஆனால் தொன்று
தொட்ட மரபார்ந்த கதையாடல் முக்கியமானது. புத்தர் இலங்கைக்கு வரவே
இல்லை என மஹாவம்சம் சொல்லும் போது, சிங்கத்திற்கும் மனிதனுக்கும்
பிறந்ததே சிங்களவர் என கதையாடும் நிலையில் ஆதமின் பாதம் புத்தரினது
என இட்டுக்கட்டுவது பெரிய விடயமொன்றல்லவே. நன்மைக்காகவன்றி
புனிதமென்ற நிலைப்பாடன்றி பாவா ஆதம் மலை சோனகரின் பரம்பலுடன்
இணைந்தது” என எழுதியிருந்தார்.
நமது கடமை என்ன?
உண்மையில் பாவா ஆதம் மலை குறித்த எமது வரலாற்று உரிமையை நாம் நாம்
விட்டுக்கொடுக்க முடியாது. அதுபற்றி உணர்வுடன் நாம் இருக்க
கடமைப்பட்டிருக்கின்றோம். உலக முஸ்லிம்களினது மட்டுமன்றி இலங்கை
சோனர்களின் வரலாற்றை நிறுவுவதற்கான பலமான வரலாற்று ஆதாரம் இதுதான்
என்பதை நாம் மறந்துவிட முடியாது.
ஆயினும் வரலாற்றின் மீதான எமது உணர்வு
மீள புதுப்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக எமது இளைய சமூகத்தினர் பாவா
ஆதம் மலைக்கு ஒரு தடவையாவது ஏறி இறங்க வேண்டும். குறித்த இடத்துக்கான
எமது அதிகப்படியான பிரசன்னம் பௌத்த மேலாதிக்க வாதத்தின் கருத்தை
சற்றுக் குறைக்குமெனக் கருதுகிறேன். எமது கவனயீனமும் வரட்டு
குதர்க்கவாதமும் அது இந்த அளவு மாற்றம் காண காரணமாயிருந்துள்ளது
என்பதை நாம் மறுக்க முடியாது.
மேற்கு நாடுகளில் இருந்து வரும்
கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் அந்த மலைக்கு மிகுந்த ஆர்வத்தோடு ஏறுவதை
நாம் காணலாம். கிறிஸ்தவர்கள், முதல் மனிதக் கோட்பாட்டை நம்புவதனால்
ஆதாமிலிருந்து வரும் அவர்களது வரலாற்றுத் தொடரை மலை ஏறுவதினூடாக
நிரூபித்து வருகின்றனர். அங்கு செல்வதால் நன்மை கிடைக்குமா போன்ற
வாதங்களால் எமது வரலாற்றை நாமே மழுங்கடிக்க முனையக் கூடாது.
புனிதப்படுத்தும் நிலைக்காகவன்றி வரலாற்றுணர்வுக்காக அதனை
தரிசிப்பது இலங்கை சோனகர் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக்
கடமையாகும்.
பாவா ஆதம் மலை குறித்த கதையாடல்கள்
இன்னும் பல மட்டங்களில் பரவலாக்கப்பட வேண்டும். சமூகம் அது பற்றிய
பிரக்ஞையற்று இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும். புதிய
தலைமுறையிடையே சிறிபாத, சிவனொளிபாத என்ற சொல்லாடல்கள்
பிரபலமானதை போல எமது பாரம்பரிய சொல்லான “பாவாதமலை” என்ற
சொல்லாடல் அவ்வளவு அறிமுகமில்லை என்பதை பலரோடு உரையாடியதில்
புரிந்துகொள்ள முடிந்தது.
பாரம்பரிய சொல் மீதான ஈடுபாடே
இப்படியென்றால் அதன் மீதான அறிவியல் நோக்கு எந்தளவுக்கு பலவீனமான
நிலையில் இருக்குமென்பதை புரிந்துகொள்ள முடியும். ஆகவே பொதுவாக
சமூகத்திலும் குறிப்பாக இளைய தலைமுறையிடம் பாவா ஆதம் மலை குறித்த கதையாடல்
பரவலாக்கப்பட வேண்டும்.
“ஆதிக்க மொழி, ஆதிக்க வரலாற்று எழுதுகை,
ஆதிக்க பண்பாட்டு வழித்தட உருவாக்கம் மற்றும் அனைத்தும் பேரினத்தின்
அச்சத்தின் மீதான எழுதுகையாக இருக்கும் போது நமது அடையாளம் புதைந்து தானே
இருக்கும்.நமது வேர்களின் ஆழத்தினை மேலால் படர்கின்ற புல்லினம் மறைக்கும்
அதே வேளை, நாமும் ஆழத்தினை அறிய முயலவில்லை என்ற குற்றம் நம்மீதும் உள்ளது”
என்ற தோழர் பர்சானின் வரிகளில் பொதிந்துள்ள உண்மைகளை நாம் மறுக்கவும்
முடியாது.
உண்மையில் சொல்லப்போனால் பாவா ஆதம் மலையை
பார்வையிட்டதிலிருந்து ஆதம் மலை மீதான எனது வரலாற்று உணர்வு சற்று
துடிப்பிழந்திருந்தது. ஆயினும் இப்போது அது பல நூறு கேள்விகளோடும்
எதிர்பார்ப்புகளோடும் உணர்வு பெற்று உயிர்பெற்றுள்ளது.
தெல்தோட்டை, தாரிக் ஸம்ஊன்
விரிவுரையாளர் இர்பானிய்யா அரபு,
இஸ்லாமிய கல்லூரி, கெகுணகொல்ல
விரிவுரையாளர் இர்பானிய்யா அரபு,
இஸ்லாமிய கல்லூரி, கெகுணகொல்ல