இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள பயணிகள் தமது பயணத்தை உறுதி செய்து கொள்வதற்கான இறுதித் திகதி நாளை 21 ஆம் திகதியென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்துள்ள பயணத்தை உறுதி செய்யும் கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் 25 ஆயிரம் ரூபா மீளளிக்கப்படக்கூடிய கட்டணத்தைச் செலுத்தி தமது பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டுமென கேட்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்வதை இதுவரை 1800 விண்ணப்பதாரிகள் உறுதி செய்துள்ளார்கள் எனவும் ஹஜ் முகவர்கள் நியமனம் இம்மாத இறுதியில் வழங்கப்படுமெனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.
இறுதி நேர சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக திணைக்களத்தின் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பதாரிகள் உடனடியாக தமது பயணத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் வேண்டியுள்ளார்.
ARA.Fareel