சப்னி அஹமட்
அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (18) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை , பாலமுனை, ஒலுவில், தீகாவாபி போன்ற பிரதேசங்களின் அபிவிருத்திகள் தொடர்பான முக்கிய விடயங்கள் இங்கு முன்வைக்கப்பட்டது ஆராய்ப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள மிக நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரிக்கை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரேரணைகள் முன்வைகப்பட்டது.
முன்வைக்கப்பட்ட தீர்மானங்களாவன;
மேலும், இக்கூட்டத்தில் ஏனையவகளால் இப்பிரதேசத்தில் இருக்கின்ற ஒலுவில் குப்பைமேட்டை வேற இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும், அட்டாளைச்சேனை மீன்சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும், அட்டாளைச்சேனையில் உள்ள் மாடறுக்கும் மடுவத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்க உரிய இடங்களை அடையாளப்பட்டுத்துவதற்கு குழுக்கள் நியக்கப்பட்டது. அத்துடன் யானை வேலி அமைப்பது தொடர்பாகவும் , அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகாவாபி போன்ற பிரதேசத்திற்கு அமைக்கப்படவுள்ள வீதிகள், வடிகான்கள், வாழ்வாதார உதவிகளுக்கு நிதிகளும் ஒதுக்கப்பட்டது.
42 சமுர்த்தி பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியளை கையளிப்பது தொடர்பாகவும், மீன்வாடி உரிமையாளர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாகவும், ஒலுவில் காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும், பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும், கோணாவத்தை பிரதேசத்தில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாகவும், வடிகான் பிரச்சினைகள் தொடர்பாகவும், அட்டாளச்சேனை மீனோடைக்கப்பட்டு வீதியில் உள்ள வளைவில் பாதுகாப்பு சுவர் அமைப்பது தொடர்பாகவும், இங்கு முழுமையாக ஆராய்ப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு இவ்விடையங்களை மேற்கொள்வதற்கான உத்தரவுகளும் பிரப்பிக்கப்பட்டதுடன், தீர்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.
அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேசங்களில் சட்டபூர்வமாக அரச நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வ்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மாடறுக்கு மடுவத்தை உடனடியாக இடம் மாற்ற வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் ,ஒருங்கிணைப்புக்குழு இணைத்தவிசாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உள்ளுராட்சி திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டவர்களுடன் துறைசார் நிபுணர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
0752502505 safnee ahamed