மாயக்கல்லி சிலை வைப்பினையும், விகாரை அமைப்பதற்கான முயற்சியினையும் மதம் சார்ந்த விடயமாக நோக்குவதினை முதலில் தவிர்க்க வேண்டும். அவை எமது நிலப் பரப்பினதும், இருப்பு சார்ந்ததுமான பிரச்சினையாகும். மதம் சார்ந்த அடிப்படைக் காரணிகளுடன் நோக்குவோமாயின் அவை இனக் கலவரத்தினதும், வங்குரோத்தான மனோ நிலைக்கும் காரணமாகிவிடும்.
மத அடிப்படையில் நோக்குகின்ற போது இலங்கயைில் அரச கட்டளைகளில் பௌத்த சாசனத்தை பாதுகாப்பது முக்கிய விடயமாகிறது. மூவின மக்கள் மிகச் சுதந்திரமாக வாழ்கின்ற நாடுகளில் இலங்கை குறிப்பிடத்தக்கது.
முழுமையான மத அடிப்படையில் அவதானிக்கின்ற போது மாயக்கல்லி மலை விவகாரம் எமக்கு சாதகமற்ற சூழலினையே ஏற்படுத்தும். ஆக மாயக்கல்லி மலை என்பதும், அவற்றினை சார்ந்திருக்கின்ற நிலம் என்பதும் பரம்பரை பரம்பரையாக எமது இருப்பாக இருந்துள்ளது. மாறாக அங்கு பள்ளி எழும்புவதும், விகாரை எழும்புவதுமான உரையாடல்களை நிகழ்த்த வேண்டியதில்லை. அடிப்படையில் இவ்விரண்டும் ஒன்றானதுதான்.
நாம் பேச வேண்டியெதல்லாம் மாயக்கல்லி எமது பூர்வீக நிலம் என்பது மட்டுமே.