வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்டுப்பாதை தொடர்பிலான மாநாடு சீன ஜனாதிபதி ஜீ ஜிங் பிங் தலைமையில் இன்று (14) பிற்பகல் ஆரம்பமாகியது.
இலங்கை சார்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான சரத் அமுனுகம, சாகல ரத்நாயக்க, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்கொண்டனர்
இன்று (14) பிற்பகல் சீன சர்வதேச மத்திய நிலையத்தில் ஆரம்பமான இந்நிகழ்வு நாளை (15) வரை நடைபெறவுள்ளது.
இதில் 29 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷபீக் ஹுஸைன்
