முஸ்லிம்களின் இருப்பிற்கு பாதுகாப்பு வழங்குக; ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை



சிறுபான்மை இனத்தவர் மீதான அடக்கு முறைகள் மற்றும் அவர்கள் மீதான அழுத்தம் குறித்து சர்வதேச தரப்பு கண்டனம் தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் ஆலோசகர் போல் கொட்ப்ரி தெரிவித்தார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 
இலங்கையின் அண்மைக்கால செயற்பாடுகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை மற்றும் கடைகள் தீ வைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் நிலைப்பாடு எவ்வாறானது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்