பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

TODAYCEYLON
0 minute read

வீட்டு உபகரணங்களை கொள்ளையிட்ட சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கொஹுவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைது கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து குளிர்சாதனப்பெட்டி ஒன்றும், நீர் சுத்திகரிப்பு உபகரணம் ஒன்றும் இன்னும் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட நபர் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
To Top