இந்திய லோக் சபாவுக்கு கள ஆய்வுக்காக செல்லும் எம்.எஸ்.எம். றியாஸ்





ஹஸ்பர் ஏ ஹலீம்


இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக  கடமை புரியும் கிண்ணியாவைச் சேர்ந்த எம்.எஸ்.எம். றியாஸ் இந்திய பாராளுமன்றமான லோக் சபா மற்றும் சட்ட சபைகளின் நடைமுறைகள் தொடர்பான கள ஆய்விற்காக எதிர் வரும்
மார்ச் மாதம் புதுடில்லி பயணமாகின்றார்.

சட்டமா அதிபர் திணைக்களம், அமைச்சவை அலுவலகம் என்பவற்றில் சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளராக கடமை புரிந்துள்ள இவர்  தற்போது பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி அலுவலகத்தில்  மொழிபெயர்ப்பு உத்தியோகத்தராக  கடமையாற்றுகின்றார்.

கந்தளாயை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கிண்ணியாவில் வசித்து வருகின்றார்...தற்போது இந்திய பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.