திருகோணமலை, தோப்புார், செல்வநகர் பகுதியில் லொறி ஒன்று மோதியதில் 4வயதுடைய சிறுமி பைசர் பாத்திமா நுஹா உயிரிழந்துள்ளார்.
மூதுார் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விடயம் தொடர்பில், சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்