எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் எனக்கு நிரந்தமில்லை - மஹிந்த

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமானது எனக்கு நிரந்தமில்லை. ஆகையினால் அதை நான் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மூன்றாம் மாடியில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.