தீவிரவாதிகள் தொடர்பில் தகவல் திரட்ட CID யினர் ஞானசார தேரரை சந்திக்க சென்றுள்ளதாக கொழும்பு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில் ஆஜராக வந்த ஞானசார தேரர் ,
வெசாக் தினத்தில் 50 விகாரைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறியதை தொடர்ந்து குறித்த விடயம் அனைவரினதும் கவனத்தை குறித்த விடயத்தின் மீது ஈர்த்தது.
இந்த நிலையில் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஞானசார தேரரிடம் தகவல் திரட்ட சிஐடி மற்றும் புலனாய்வு பிரிவினர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.