Headlines
Loading...
40 ஆயிரம் பயங்கரவாதிகள் எம் நாட்டில் உள்ளனர் : பாகிஸ்தான் பிரதமர்

40 ஆயிரம் பயங்கரவாதிகள் எம் நாட்டில் உள்ளனர் : பாகிஸ்தான் பிரதமர்

தனது நாட்டில் 40 பயங்­க­ர­வாதக் குழுக்கள் இருப்­ப­தா­கவும், 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரை­யான பயங்­க­ர­வா­திகள் ஆயு­தங்கள் சகிதம் இயங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் வொஷிங்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை அதிர்ச்­சி­க­ர­மான தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.

அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருக்கும் அவர் அமெ­ரிக்க காங்­கி­ரஸின் பாகிஸ்தான் விவ­காரக் குழுவின் தலை­வி­யான ஷீலா ஜக்சன் லீயினால் கெப்­பிட்டல் ஹில்லில் அளிக்­கப்­பட்ட விருந்­து­ப­சா­ரத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

“பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் போரை நாம் நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். 9/11 பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுடன் பாகிஸ்­தா­னுக்கு எந்தச் சம்­பந்­தமும் இல்லை. அல் – குவைதா இயக்கம் ஆப்­கா­னிஸ்­தா­னி­லேயே இருந்­தது. பாகிஸ்­தானில் தீவி­ர­வாத தலி­பான்கள் இல்லை.

ஆனால், நாம் அமெ­ரிக்­காவின் போரில் இணைந்­து­கொண்டோம். துர­திஷ்­ட­வ­ச­மாக, நில­வ­ரங்கள் எல்லாம் தவ­றா­கப்­போய்­விட்­டன. எனது அர­சாங்­கத்தை நான் குற்­றஞ்­சாட்­டு­கிறேன். பாகிஸ்­தானில் உள்ள உண்மை நில­வ­ரங்­களை நாம் அமெ­ரிக்­கா­வுக்கு சொல்­ல­வில்லை. பாகிஸ்­தானில் நில­வ­ரங்கள் அர­சாங்­கங்­களின் கட்­டுப்­பாட்டில் இருக்­க­வில்லை என்­பதே உண்­மை­யாகும்.

எனது நாட்டில் 40 வேறு­பட்ட பயங்­க­ர­வாதக் குழுக்கள் இயங்­கு­கின்­றன. உயிர் தப்பி வாழு­வோமா என்ற கவ­லை­யுடன் எம்­மைப்­போன்ற ஆட்கள் காலத்தைக் கடத்­தி­வந்­தி­ருக்­கிறோம். நாம் இன்னும் கூடு­த­லாக செயற்­ப­ட­வேண்டும் என்று அமெ­ரிக்கா எதிர்­பார்த்­தது. போரை அமெ­ரிக்கா வெல்­வ­தற்கு நாம் உத­வ­வேண்டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. அந்த நேரத்தில் எனது நாடு அதன் சொந்த இருப்­புக்­காக போரா­டிக்­கொண்­டி­ருந்­தது.

எனது இந்த விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்­பு­டனும் ஏனைய உயர்­மட்ட தலை­வர்­க­ளு­டனும் முக்­கி­ய­மான சந்­திப்­பு­களை நடத்­தினேன். முதலில் எமக்­கி­டை­யி­லான உற­வு­முறை பரஸ்­பர நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் அமை­ய­வேண்டும். சமா­தானச் செயன்­மு­றை­களைப் பொறுத்­த­வரை பாகிஸ்­தா­னினால் செய்­யக்­கூ­டி­யது என்ன என்­பதை நேர்­மை­யாக அமெ­ரிக்­கா­வுக்கு நாம் சொல்­ல­வேண்டும்.

பேச்­சு­வார்த்­தையை தொடங்­கு­வ­தற்கு தலி­பான்­களை மேசைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு பாகிஸ்தான் தன்னால் இயன்­ற­வரை முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இது­வரை, நாம் சிறப்­பா­கவே செயற்­பட்­டி­ருக்­கின்றோம். சமா­தான செயன்­மு­றைகள் சுல­ப­மா­னவை அல்ல என்­பதை அமெ­ரிக்கா புரிந்­து­கொள்­ள­வேண்டும்” என அவர் தெரி­வித்தார்.

அதே­வேளை, பிர­தமர் இம்ரான் கான் வாஷிங்­டனில் உள்ள சமா­தா­னத்­துக்­கான அமெ­ரிக்க நிறு­வ­னத்தில் ஆற்­றிய பிறி­தொரு உரையில் பாகிஸ்­தானில் இன்­னமும் 30,000 தொடக்கம் 40,000 வரை­யான பயங்­க­ர­வா­திகள் இருக்­கி­றார்கள் என குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

“நாம் ஆட்­சிக்கு வரும்­வரை, அர­சாங்­கங்­க­ளிடம் அர­சியல் துணி­வாற்றல் இருக்­க­வில்லை. ஏனென்றால் தீவி­ர­வா­தக்­கு­ழுக்கள் என்று வரும்­போது ஆய­த­பா­ணி­க­ளான 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் உறுப்­பி­னர்கள் அந்த குழுக்­களில் அங்கம் வகித்து செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் ஆப்­கா­னிஸ்தான் அல்­லது காஷ்­மீரின் பகு­தி­களில் பயிற்சிபெற்று சண்டையில் ஈடுபடுகிறர்கள்.

எமது அர­சாங்­கமே தீவி­ர­வா­தக்­கு­ழுக்­களை நிரா­யு­த­பா­ணி­க­ளாக்கும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்த முதல் அர­சாங்­க­மாகும். முதல் தட­வை­யாக இது நடைபெறுகின்றது. தீவிரவாதிகளின் நிறுவனங்களை, மத போதனை நிலையங்களை நாம் சுவீகரித்தோம். இப்போது எமது நிர்வாகிகள் அவற்றை பரிபாலனம் செய்கிறார்கள்” என்று அவர் தனதுரையில் மேலும் கூறினார்.

0 Comments: