Headlines
Loading...
அமைச்சு பதவியை ஹரீஸ் ஏற்க மாட்டார்.?

அமைச்சு பதவியை ஹரீஸ் ஏற்க மாட்டார்.?

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நாளை (13) சனிக்கிழமை மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை பெறவிருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தனது பதவி ஏற்றுகொள்ள மாட்டார் என தெரியவருகிறது

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் அரசாங்கம் நடுநிலைமைப் போக்கை கடைபிடிக்கவில்லை எனவும், இது தொடர்பில் அரசாங்கத்தின் சரியான நிலைப்பாடு கிடைக்கும் வரை  அமைச்சு பொறுப்பைக்களை ஏற்க்க மாட்டார் என தெரியவருகிறது. 

நேற்று (11) பாராளுமன்றில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுக்களை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பான கூட்டத்தில் ஹரீஸ். எம். பி இருக்கவில்லை எனவும்,  அமைச்சுக்களை பொறுப்பெடுப்பதற்கு ஏனைய முஸ்லிம் எம்.பிக்களிடம் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகவும் தெரியவருகிறது. 

மேலும், நாளை முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியை ஜனாதிபதி முன்னிலையில் ஏற்கவுள்ளனர். 

0 Comments: