Headlines
Loading...
ஷாபி விகாரம் : ஒரு வார காலத்துக்குள்  பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்

ஷாபி விகாரம் : ஒரு வார காலத்துக்குள் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்

பெண்ணின் கர்ப்பப் பையை அகற்றுவது என்பது சிங்கள மக்களுக்கு மாத்திரம் அல்ல உலகில் வாழும் எந்தவொரு இனத்தையும் பாதிக்க கூடிய உணர்வுபூர்வமான விடயமாகும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக ரணவக , வைத்தியர் ஷாபி விவகாரத்தை விசாரணை என்ற பேரில் காலம் கடத்துவது சிங்கள பௌத்தர்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் அந்த இனத்தை சார்ந்த வைத்தியர்கள் குறித்தும் சந்தேகங்களுக்கே வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஹெட்டிபொல – படுவஸ்நுவர வாராந்த சந்தை தொகுதி மற்றும் பல்நோக்குக் கட்டட தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக ரணவக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் , வைத்தியர் ஷாபி தொடர்பான பிரச்சினைக்கு ஒரு வார காலத்தில் தீர்வைக் காண முடியும். நீதிமன்றத்துக்குச் சென்று பல வருட காலமாக இழுத்தடிப்பு செய்ய வேண்டிய விடயமல்ல. இலங்மைக வைத்திய சபை மற்றும் அரசாங்கம் ஒன்றிணைந்து வைத்தியர் ஷாபி தொடர்பான பிரச்சினையை தீர்க்க முடியும். மேலும் சிங்கள மற்றும் தமிழ் வைத்தியர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சத்திர சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை வைத்தியர் ஷாபியுடன் மீளாய்வு செய்தால் மிக எளிதாக ஒரு தீர்மானத்துக்கு வந்து விட முடியும்.

குறித்த சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம் தாய்மார்களின் குழந்தை பெறும் வீதத்தை கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தாலும் பிரச்சிணையை தீர்த்துக்கொள்ள முடியும். ஏகவே ஒரு வார காலத்துக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

0 Comments: