தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடுகிறது..!

NEWS
0 minute read
0
தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பற்றி இதன்போது ஆராயப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தினத்தை அறிவிக்கும் அதிகாரம் தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தினம் வேட்புமனு கோரப்படும் தினம் போன்ற முக்கிய தீர்மானங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரம் 15ஆம் திகதிக்கும், ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் திணைக்களம்
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)