நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிப்பதானால் தேர்தலில் நான் போட்டியிடும் அவசியமில்லை - ரணில்

NEWS
0 minute read
0


இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிப்பது என்றால், எதிர்வரும் ஜனாதிபதித் தேரர்தலில் போட்டியிடும் அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான இறுதி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
To Top