புத்தளத்தில் இன்று ஒத்திகை தேர்தல்


புத்தளத்தில் பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.




புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் என். ரேகன் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பரீட்சார்த்த தேர்தலில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, புத்தளம் மாவட்ட செயலாளர் சந்திரஸ்ரீ பண்டார உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெற்ற குறித்த பரீட்சார்த்த தேர்தலில் 603ஏ கரம்பை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 200 வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர்.




- ரஸீன் ரஸ்மின்

கருத்துரையிடுக

0 கருத்துகள்