உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 7 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பணிப்புரையில் அவர் இன்று முற்பகல் 9.48 அளவில் ஆணைக்குழுவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
