இன்று இரவு பயணிக்கவிருந்த இரவு நேர தபால் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்துக்குட்பட்ட பொலிஸ் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதால், இவ் ரயில்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் தபால் ரயிலைத் தவிர ஏனைய ரயில்கள் உரிய அட்டவணையின் படி சேவையில் ஈடுபடுமென்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்