கண்டி, களுத்துறையில் சில கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் முடக்கம்.



கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் நேற்றிரவு முதல், மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம், களுத்துறை – பண்டாரகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம கிழக்கு, எபிட்டமுல்ல, கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கண்டி-அக்குறணை பிரதேச செயலக பிரிவில் உலுகஹதென்ன, தெலெம்புகஹவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்