மியான்மாரில் ஆளும் கட்சி சார்பில் எம்பியாகத் தெரிவு செய்யப்பட்டவர் சுட்டுக் கொலை!


மியான்மாரில் ஆளும் கட்சிக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட எம்பியொருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு ஷான் மாகாணத்தைச் சேர்ந்த டிக்கே ஷோ (Htike Zaw) என்பவர் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சி தரப்பில் எம்பியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் அவர் தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். டிக்கேவைச் சுட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு மியான்மார் அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்